மணமேல்குடி அருகே செல்போனிற்கு சார்ஜ் போடும் பொழுது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் பலி.

மணமேல்குடி, மார்ச்.28-

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே காட்சிகொடுத்தான் பிச்சனேந்தல் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 20). இவர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது செல்போனில் சார்ஜ் போட முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஜெகதீஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மணமேல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெகதீஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button