புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை நடைபெறும் இடங்கள் அறிவிப்பு.

புதுக்கோட்டை, ஜூலை. 24-

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஊரகப்பகுதிகளில் கடந்த 11-ந் தேதி முதல் தொடங்கி வருகிற செப்டம்பர் மாதம் 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.

பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து பயனடையலாம். இம்முகாம் நாளை (வியாழக்கிழமை) புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், 9பி நத்தம்பண்ணை ஊராட்சி, 9ஏ நத்தம்பண்ணை, எல்லைப்பட்டி, சுப்பிரமணியன் வள்ளியம்மை திருமண மண்டபத்தில், நத்தம் பண்ணை, 9பி நத்தம்பண்ணை, கவிநாடு மேற்கு, கவிநாடு கிழக்கு, திருமலைராய சமுத்திரம் ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற உள்ளது.

இதேபோல அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், ரெத்தினக்கோட்டை ஊராட்சி, வைரிவயல் என்.கே.எஸ்.திருமண மண்டபத்தில், அழியாநிலை, முக்குடி, ரெத்தினக்கோட்டை, நாட்டுமங்கலம், மாங்குடி ஆகிய ஊராட்சிகளுக்கும்,

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், வேந்தன்பட்டி ஊராட்சி, இடையபு தூர் சமுதாய கூடத்தில், வார்பட்டு, திருகளம்பூர், வேந்தன்பட்டி, ஆர்.பாலக்குறிச்சி, மேலசிவபுரி, ஏனாதி, மயிலாப்பூர் ஆகிய ஊராட்சிகளுக்கும் நடைபெற உள்ளது.

மேற்கண்ட முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமறு கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button