எம்.பி.ஏ., எம்.இ. மேற்படிப்புக்கான டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஜன.24-
எம்.பி.ஏ., எம்.இ. மேற்படிப்புக்கான டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு சேர்வதற்கும், எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க் என்ஜினீயரிங் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கும், அண்ணாபல்கலைக்கழகம் நடத்தும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) மற்றும் பொது என்ஜினீயரிங் நுழைவுத் தேர்வில் (சீட்டா) தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.
2025-26-ம் கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வுகள் தொடர்பான விவரங்கள் கீழ்வருமாறு:
தேர்வுகள் நடைபெறும் தேதிகள்:
- டான்செட் நுழைவுத் தேர்வு: 2025 மார்ச் 22
- சீட்டா நுழைவுத் தேர்வு: 2025 மார்ச் 23
ஆன்லைன் விண்ணப்ப பதிவு:
இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்குகிறது.
இளநிலை பட்டப்படிப்பு முடித்த அல்லது இறுதி செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்:
விண்ணப்பக் கடைசி நாள்:
பிப்ரவரி 21, 2025
இந்த தகவல்களை அண்ணாபல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு துறை செயலாளர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.