மீமிசல் அருகே கொளுவனூரில் மின்கம்பத்தில் மோதி கார் விபத்து.
மீமிசல்,மே,11-
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே மீமிசல்- ஆவுடையார்கோவில் சாலையில் சென்னையிலிருந்து எஸ்.பி பட்டினம் நோக்கி கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது கொளுவனூர் என்ற இடத்தில் காரை வேகமாக இயக்கியதால் திடீரென கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
மேலும் மின்கம்பத்தில் மோதிய கார் அருகில் இருந்த பள்ளத்திற்குள் பாய்ந்து மரத்தில் மோதி நின்றது. கார் மோதியதில் மின்கம்பம் இரண்டாக உடைந்து கீழே விழுந்தது, அதனுடன் இணைக்கப்பட மின்கம்பிகளும் அறுந்து தரையில் விழுந்தன.
இதில் காரில் பயணித்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
![](https://gpmthalaimurai.com/wp-content/uploads/2024/05/20240511_1542482_yon1giau2k7328275324845641983-1024x702.jpg)
![](https://gpmthalaimurai.com/wp-content/uploads/2024/05/20240511_1541522_hhvlhmc34t895864290613704153-1024x710.jpg)
![](https://gpmthalaimurai.com/wp-content/uploads/2024/05/20240511_1542082_25tbvjlu105803627691965795657-1024x710.jpg)
![](https://gpmthalaimurai.com/wp-content/uploads/2024/05/20240511_1542262_ifcrakb98s5611634853495816968-1024x710.jpg)
![](https://gpmthalaimurai.com/wp-content/uploads/2024/05/20240511_155045_r8mhsjpe1l3405170288153495306-1024x1024.jpeg)
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
2
+1