அறந்தாங்கி வழியாக இயக்கப்படும் செகந்திராபாத் சிறப்பு ரெயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
புதுக்கோட்டை, டிச.30-
அறந்தாங்கி வழியாக இயக்கப்படும் செகந்திராபாத் சிறப்பு ரெயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
சேவை நீட்டிப்பு
செகந்திராபாத் – ராமநாதபுரம் இடையே சிறப்பு விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விரைவு ரெயில் சேவையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தென் மத்திய ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி செகந்திராபாத் – ராமநாதபுரம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 07695) ஜனவரி 1, 8, 15, 22, 29, பிப்ரவரி 5, 12, 19, 26, மார்ச் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் புதன்கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.45 மணிக்கு ராமநாதபுரம் வந்து சேரும்.
நின்று செல்லும் இடங்கள்
இதேபோல் மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் – செகந்திராபாத் சிறப்பு ரெயில் (வண்டி எண் 07696) ஜனவரி 3, 10, 17, 24, 31, பிப்ரவரி 7, 14, 21, 28, மார்ச் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.
இந்த ரெயில்கள் நலகொண்டா, மிரியால் குடா, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, ஓங்கோல், காவாலி, நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ெரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
அறந்தாங்கி
செகந்திராபாத்தில் இருந்து வரும்போது இந்த ரெயில் அறந்தாங்கி ரெயில் நிலையத்திற்கு வியாழக்கிழமை இரவு 7.14 மணிக்கு வந்து 7.15 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் ராமநாதபுரத்தில் இருந்து புறப்படும்போது வெள்ளிக்கிழமை பகல் 12.29 மணிக்கு வந்து 12.30 மணிக்கு புறப்படும் என்று ரெயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.