ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு: உடல்கள் சாம்பலாக கண்டுபிடிப்பு

மே 20, 2024

டெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. துருக்கி நாட்டு ட்ரோன் விபத்து நடந்த இடத்தை கண்டுபிடித்து அந்த பகுதியில் ஹெலிகாப்டர் நொறுங்கி கிடந்த நிலையில் அனைவரது உடல்களும் கருகி போனதாக தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூசைன் அமிரப்துல்லாஹியனும் உயிரிழந்தார்.

ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைஷி. இவர், அஜர்பைஜான் நாட்டின் ஹராஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை திறக்கும் நிகழ்ச்சிக்காக நேற்று (மே.19) ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக, அவர் பயணித்த ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

டெஹ்ரான் நகரில் இருந்து 600 கி.மீ., தொலைவில் உள்ள ஜோல்பாவில் அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதிபர் இப்ராஹிம் ரைஷியுடன், ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் ஹெலிகாப்டரில் பயணித்துள்ள நிலையில், எரிந்த சாம்பலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2021ல் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராஹிம் , இஸ்ரேலுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார். சமீபத்தில், சிரியாவில் உள்ள ஈரான் நாட்டின் துாதரகத்தின் மீது, இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேல் மீது, ஈரான் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

மீட்புப்பணிக்கென 32 மலையேறும் வீரர்களை துருக்கி அனுப்பியது. அந்நாட்டு ட்ரோன் விபத்து நடந்த இடத்தை கண்பிடித்தது. தற்போது உடல்களை சேகரிக்கும் பணி நடக்கிறது.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button