புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் அடையாள எண் பெற பொது சேவை மையங்களில் இலவசமாக பதியலாம் வருகிற 31-ந் தேதி கடைசி நாள்

புதுக்கோட்டை, மார்ச்.6-
புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் அடையாள எண் பெற பொது சேவை மையங்களில் இலவசமாக பதியலாம் வருகிற 31-ந் தேதி கடைசி நாள்
ஆவணங்கள்
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப்பலன்களை பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொருமுறையும் சமர்ப்பிக்க வேண்டி உள்ளது.
இதில் ஏற்படும் காலதாமதத்தினை தவிர்க்கும் வகையிலும் அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும் அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட தமிழ்நாட்டில் வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது, விவசாயிகளின் பதிவு விவரங்களுடன் ஆதார் எண், செல்போன் எண், நில உடைமை விவரங்களையும் விடுபாடின்றி இணைக்கும் பணி சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் நடைபெற்று வருகிறது.
அடையாள எண்
மேலும் விவசாயிகள் பொது சேவை மையம் சென்று அங்கும் நில உடைமை விவரங்கள் இணைக்கப்பட்ட பின்னர் அனைத்து விவரங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும். 2025-26-ம் நிதி ஆண்டு முதல் பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டம், பயிர் காப்பீட்டுத் திட்டம் போன்ற மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம்.
எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள், அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாக சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார், செல்போன் எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி வருகிற 31-ந் தேதிக்குள இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தொிவித்துள்ளார்.