மீமிசலில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு.

மீமிசலில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு.
மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் வீரமாகாளி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
இதையடுத்து மாட்டு வண்டிகள் எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கைத்தட்டி, விசில் அடித்து சாரதிகளை உற்சாகப்படுத்தினர்.
பரிசு
இதையடுத்து பந்தயத்தில் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கம், கேடயம், பருத்தி விதை, மாட்டு கயிறு ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது.
பந்தயம் நடைபெற்ற மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் திரளான ரசிகர்கள் திரண்டு இருந்து கண்டு களித்தனர். பாதுகாப்பு பணியில் மீமிசல் போலீசார் ஈடுபட்டனர்.





