ஒரு ஆண்டுக்கு ரூ.3000 – 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 செலுத்தி, இந்தியா முழுவதும் சுங்கச்சாவடிகள் இலவசம்!

தமிழ்நாடு, பிப். 8 –
ஒரு ஆண்டுக்கு ரூ.3000 – 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 செலுத்தி, இந்தியா முழுவதும் சுங்கச்சாவடிகள் இலவசம்!
நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணமின்றி பயணம் செய்ய புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
புதிய திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
- ஒரு ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தினால், அந்த ஆண்டில் இந்தியா முழுவதும் எந்த சுங்கச் சாவடியிலும் கட்டணமின்றி பயணிக்கலாம்.
- ஒரே முறையாக 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 கட்டினால், இந்த காலக்கட்டத்திற்கு முழுமையாக சுங்கக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
- இந்த பயனாளிகள் கணக்கில் பதிவு செய்யப்படும் அட்டைகள், பாஸ்டேக் (FASTag) அட்டையுடன் இணைக்கப்படும்.
- இந்த திட்டம் வெகுவிரைவில் நடைமுறைக்கு வரும்.
எதற்காக இந்த திட்டம்?
- நாடு முழுவதும் உள்ள வாகன ஓட்டிகளுக்கு சுங்கச் சாவடிகளில் நேரம் வீணாகாமல் இருக்க
- நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து எளிதாகச் செல்ல
- சுங்கச்சாவடிகளில் நெரிசலை குறைக்க
- தொகுப்பாக கட்டணத்தை செலுத்துவதன் மூலம் பயணிகள் செலவைக் குறைக்க
இந்த திட்டம் செயல்படுத்தப்படும்போது, நாடு முழுவதும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் இதன் பயனை பெறுவார்கள் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1





