தீபாவளி பண்டிகையையொட்டி நாகை- இலங்கை இடையே இந்த மாதம் முழுவதும் கப்பல் சேவை; இரு நாட்டு பயணிகள் கோரிக்கையை ஏற்று இயக்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி நாகை- இலங்கை இடையே இந்த மாதம் முழுவதும் கப்பல் சேவை; இரு நாட்டு பயணிகள் கோரிக்கையை ஏற்று இயக்கப்படுகிறது.
நாகை- இலங்கை காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

இதில் நாள்தோறும் இலங்கையில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், வெளிநாட்டினர் என ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்.
இருநாட்டு பயணிகளின் ஆர்வத்தால் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இரு மார்க்கத்திலும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி இரு நாட்டு பயணிகள் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து இந்த மாதம் (அக்டோபர்) முழுவதும் வாரத்தில் 7 நாட்களும் கப்பல் சேவை நாகை- இலங்கை இடையே நடைபெறும் என சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதாவது வருகிற 14, 21, 28-ந் தேதிகளில் செவ்வாய்க்கிழமைகளில் கப்பல் சேவை தொடர்ந்து நடைபெறும்.
வருகிற 20-ந்தேதி தீபாவளி அன்று மட்டும் இருவழி கப்பல் சேவை நடைபெறாது என்றும் சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.





