கோபாலப்பட்டினம் அவுலியாநகர் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய ஆண் சடலம்; போலீசார் விசாரணை.

கோபாலப்பட்டினம் அவுலியாநகர் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய ஆண் சடலம்; போலீசார் விசாரணை.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினம் அவுலியாநகர் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை அளவில் அடையாளம் தெரியாத வகையில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கி இருந்தது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே மீமிசல் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி கரை ஒதுங்கிய உடல் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரை ஒதுங்கிய உடல் சுமார் பத்து நாட்களுக்கு முன்பு இறந்தது போல் தெரிகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1