கடைகளின் பூட்டை உடைத்து ரூ.85 ஆயிரம் திருட்டு

அறந்தாங்கி, மே.27-
அறந்தாங்கி நவரத்தின நகர் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). இவர் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் சிமெண்டு கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று உள்ளார். நேற்று காலையில் கடையை திறப்பதற்கு வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது முகமூடி அணிந்த மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.56 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இதேபோல், பூவற்றக்குடி கிராமத்தை சேர்ந்த பிரம்மையா (50) என்பவரின் சூப்பர் மார்க்கெட் கடையின் பூட்ைட உடைத்து கடையில் இருந்த ரூ.30 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். அழியாநிலை கிராமத்தை சேர்ந்த மாயாண்டி (38) என்பவர் மளிகை கடையின் பூட்டை உடைக்க மர்மநபர்கள் முயற்சித்து உள்ளனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்த புகார்களின் பேரில், அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button