புதுக்கோட்டை மாநகராட்சியோடு ஊராட்சிகளை சேர்ப்பதற்கு எதிர்ப்பு: நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் மனு கொடுக்கும் போராட்டம்.

புதுக்கோட்டை, மே.24-

புதுக்கோட்டை மாநகராட்சியோடு ஊராட்சிகளை சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

11 ஊராட்சிகளை இணைத்து…

கடந்த மாதம் புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி மாநகராட்சியில் திருக்கட்டளை, தேக்காட்டூர் உள்ளிட்ட 11 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சி உருவாக்கப்படும் என்றும் அரசு அறிவித்தது.

இதற்கு திருக்கட்டளை, தேக்காட்டூர் உள்ளிட்ட பல பஞ்சாயத்துகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக மாநகராட்சியோடு இணைத்தால் 100 நாள் வேலைத்திட்டம் பறிபோகும், வரி உயர்த்தப்படும் என்பதால் மாநகராட்சியோடு இதனை இணைக்க கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முற்றுகை

இந்நிலையில் வேண்டாம் மாநகராட்சி கூட்டமைப்பு சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் புதுக்கோட்டை மாநகராட்சியோடு 11 ஊராட்சிகளை இணைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்ற கோரி மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர். அதன்பின் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button