அறந்தாங்கியில் மோட்டார் சைக்கிள் திருடிய 4 வாலிபர்கள் கைது.

அறந்தாங்கி, மே.10-

அறந்தாங்கியில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் வாலிபர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

இதுகுறித்து அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை பறிகொடுத்தவர்கள் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், போலீசார் மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் பிடிக்க தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

4 வாலிபர்கள் கைது

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், மோட்டார் சைக்கிளை திருடியது அறந்தாங்கி சின்ன அண்ணா நகரை சேர்ந்த கண்ணன் மகன் மோகன் (வயது 20), அறந்தாங்கி ரெயில்வே ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த தங்கதுரை மகன் பிரகாஷ் (23), அறந்தாங்கி களப்பக்காடு பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மகன் செல்வகுமார் (19), அறந்தாங்கி அக்ரஹாரம் தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் மகேந்திரன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரும் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடிய போது போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button