பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் இடத்தை பிடித்த பாப்புலர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசலில் உள்ள பாப்புலர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவிலும், பத்தாம் வகுப்பில் சுற்றுவட்டாரத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்தும் சாதனை படைத்துள்ளனர்.
பன்னிரெண்டாம் வகுப்பு
![](https://gpmthalaimurai.com/wp-content/uploads/2024/05/20240510_112332_iklpluhm502756172732839330292-1024x1024.jpeg)
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதத்தில் 2023-2024ம் கல்வியாண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. அண்மையில் தேர்வு முடிவுகள் வெளியானயது.
இதில் அறந்தாங்கி கல்வி மாவட்டம் மற்றும் ஆவுடையார்கோவில் ஒன்றியம், மணமேல்குடி ஒன்றிய அளவில் 12-ஆம் வகுப்பு தேர்வில் மீமிசல் பாப்புலர் மெட்ரிக் பள்ளியில் படிக்கும் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த முகமது இப்ராஹீம் என்ற மாணவன் முதலிடத்தை பிடித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மரக்கடை தாஜிதீன் பேரனும், SRM. சேகு பரிது பேரனும் மரக்கடை சாதிக் பாட்சா அவர்களின் மகனுமாகிய முகமது இப்ராஹீம் என்ற மாணவன் 578/600 எடுத்து அறந்தாங்கி கல்வி மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம், மணமேல்குடி ஒன்றிய அளவில் முதலிடத்தையும், இயற்பியல் படத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளார்.
இந்த தேர்வில் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 66 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 100% சதவிகிதம் தேர்ச்சி பெற்று ஆவுடையார்கோவில் ஒன்றியம், மணமேல்குடி ஒன்றிய அளவில் முதலிடத்தையும், அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் BIO MATHS பாடப்பிரிவில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.
![](https://gpmthalaimurai.com/wp-content/uploads/2024/05/20240510_125235_j1o60und0h2339856988205418571-1024x1024.jpeg)
பத்தாம் வகுப்பு
அதேபோன்று போன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று 10.05.24 வெள்ளிக்கிழமை வெளியான நிலையில் இத்தேர்வில் பள்ளி அளவில் 482/500 மதிப்பெண் பெற்று ஜனனி என்ற மாணவி முதல் இடத்திலும், 480/500 பெற்று அப்னான் சபாப் என்ற மாணவன் இரண்டாம் இடத்திலும் 475/500 மதிப்பெண் பெற்று அப்சர் கான் என்ற மாணவன் மூன்றாம் இடத்தையும் பிடித்து சுற்றுவட்டார அளவில் முதல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
இந்த தேர்வில் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 50 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் கணித பாடத்தில் 8 பேர் 100/100 மதிப்பெண் பெற்றும், ஆங்கில பாடத்தில் 1 மாணவர் 100/100 மதிப்பெண் பெற்றும் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், மாணவர்களின் கல்விக்கு சிறந்த பயிற்சி அளித்த பாப்புலர் பள்ளி நிர்வாகத்திற்கும் GPM தலைமுறை மீடியா சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
![](https://gpmthalaimurai.com/wp-content/uploads/2024/05/20240510_150713_8isemt3t693114303289195598173-1024x1024.jpeg)