மீமிசல் அருகே கடற்கரை பகுதியில் ஆண் பிணம் மீட்பு.

மீமிசல் அருகே கடற்கரை பகுதியில் ஆண் பிணம் மீட்பு.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கோபாலப்பட்டினம் மற்றும் ஆர்.புதுப்பட்டினம் இடையே உள்ள கடற்கரை பகுதியில் ஆண் பிணம் கிடந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து மீமிசல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆண் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர், தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து உடலை இங்கு கொண்டு வந்து தூக்கி போட்டு சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1





