இனி 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் தாமாகவே வங்கி கணக்கை துவங்கலாம்; ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

இனி 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் தாமாகவே வங்கி கணக்கை துவங்கலாம்; ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

ஏப்ரல் 21 இன்று 10 வயத்திற்குமேல் உள்ள சிறுவர், சிறுமிகள் அவர்களே சுயமாக வங்கிக் கணக்கைத் தொடங்கலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்குமுன் ஒரு குழந்தை 18 வயதிற்குமுன் வங்கிக் கணக்கை தொடங்க பல கட்டுப்பாடுகள் இருந்தன, இந்நிலையில் அத்தடையை ரிசர் வங்கி நீக்கியுள்ளது. அதைப் பற்றிய முழு விவரங்களையும் இனி பார்க்கலாம்.

இனி 10 வயதிற்குமேற்பட்ட சிறார்கள் டெர்ம் டெபாசிட்டுடன் சேர்த்து வங்கிக் கணக்கைத் தொடங்கலாம் எனவும் அறிவித்துள்ளது. வங்கிக் கணக்கை திறக்கும் சிறார்களின் கையொப்பம் வங்கியின் பதிவேட்டில் இருப்பது கட்டாயம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதோடு வங்கி சார்ந்த அனைத்து சேவைகளும் ATM கார்டு, காசோலை உட்பட ஆன்லைன் வசதிகளும் அவர்களுக்கு மிக எளிதாக வங்கிகள் செய்து தர வேண்டும் எனவும் கூறியுள்ளது.

ஜூலை 1, 2025 க்குள் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களுடன் அவற்றை இணைக்க புதிய அல்லது ஏற்கனவே உள்ள கொள்கைகளை திருத்துமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

சரி அப்போ 10 வயதிற்குப்பட்டோர் வங்கிக் கணக்கை திறக்க முடியாதா?

இல்லை, 10 வயதிற்கும்கீழ் இருக்கும் சிறார்களும் வங்கிக் கணக்கை திறக்கலாம், ஆனால் தாய் அல்லது தந்தையை கார்டியனாக வைத்து வங்கிக் கணக்கை தொடங்கும் வசதியை ரிசர்வ் வங்கி ஏற்கனவே வைத்துள்ளது.

ரிசர்வ் வங்கி, சிறார்களுக்கு வங்கிக் கணக்கை திறக்க அனுமதி அளித்தாலும், ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் பணத்தை எடுக்க முடியாது. அவர்கள் பணத்தை எடுக்க வரம்பு உள்ளது.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button