கோபாலப்பட்டினத்தைச் சேர்ந்த முகம்மது நூருல்லா – சவுதி செந்தமிழ் பாசறை செயலாளராக தேர்வு

கோபாலப்பட்டினத்தைச் சேர்ந்த முகம்மது நூருல்லா – சவுதி செந்தமிழ் பாசறை செயலாளராக தேர்வு
புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினத்தைச் சேர்ந்த முகம்மது நூருல்லா அவர்கள், சவுதி அரேபியாவில் இயங்கி வரும் நாம் தமிழர் கட்சியின் “சவுதி செந்தமிழ் பாசறையின்” செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, கடந்த பத்து ஆண்டுகளாக சவுதியின் தமாம், ரியாத், சித்தா, ஜுபைல், அல் ஹாசா, மக்கா, மதினா, அல் கசிம், கப்ஜி உள்ளிட்ட மண்டலங்களில் செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் இதில் இணைந்து, சமூக சேவைகளில் பங்கேற்று வருகின்றனர்.

குருதி கொடை முகாம், வருடாந்திர தமிழர் ஒன்று கூடல், சவுதி சட்டத்திற்கு உட்பட்டு உறவினர்களுக்கு அவசர கால உதவி, மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் ஆகியவை இந்த அமைப்பின் முக்கிய பங்களிப்புகளாகும்.
சவுதி செந்தமிழ் பாசறையின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சகோதரர் முகம்மது நூருல்லா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.





