விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை.

மீமிசல், அக்.16 –

விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை.

புதுக்கோட்டை மாவட்டம் கடலோர பகுதிகளான கோபாலப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மற்றும் மீமிசல் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் உள்ளன.

இதில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தினமும் கடலுக்கு சென்று மீன்பிடிப்பது வழக்கம்.

சமீபத்தில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் கடலோரப் பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீன்பிடிக்க செல்ல தடை

இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சர்ர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் கோபாலப்பட்டினம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மற்றும் மீமிசல் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்றிலிருந்து (புதன்கிழமை) மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் தங்களது படகுகளை மீன்பிடி தளத்தில் நிறுத்தி, மீன்பிடி உபகரணங்கள் மற்றும் வலைகளை பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button