மீன்பிடி தடைக்காலம்: பழுது நீக்க விசைப்படகுகளை கரையேற்றும் மீனவர்கள், மானியத்துடன் கடனுதவி வழங்க கோரிக்கை.

தொண்டி, ஏப்.25-
தொண்டி பகுதியில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பழுது நீக்குவதற்காக விசைப்படகுகளை மீனவர்கள் கரையேற்றம் செய்து வருகின்றனர்.

மீன்பிடி தடைக்காலம்

தொண்டி, சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் நகர், சோளியக்குடி ஆகிய மீனவ கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது. மீன்பிடி தடைக்காலம் கடந்த 14-ந்தேதி இரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. இதனால் இப்பகுதி மீனவ கிராமங்களில் விசைப்படகுகள் அனைத்தும் நங்கூரமிடப்பட்டு கடலில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் விசைப்படகுகளை பழுது நீக்குவதற்கு அவற்றை கரையேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எப்போதும் மீன்கள், கருவாடு விற்பனை என பரபரப்பாக காணப்படும் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நகர் பகுதி தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

கடனுதவி

இதுகுறித்து சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நகர் மீனவ கிராம தலைவர், காளிதாஸ் கூறுகையில், அரசு அறிவித்துள்ளபடி 61 நாட்கள் விசைப்படகுகளுக்கான மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் சிங்காரவேலர் நகர் மீனவ கிராமத்தில் விசைப்படகுகளை பழுது நீக்குவதற்காக கரையேற்றம் செய்து வருகிறோம்.

சாதாரணமாக ஒரு விசைப்படகை சீரமைக்க ரூ.1 முதல் 2 லட்சம் வரை செலவாகும். பெரிய அளவில் வேலைகள் இருந்தால் ரூ.6 லட்சம் வரை செலவாகும்.

இதனால் விசைப்படகு மீனவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கடன் சுமைக்கு ஆளாகிறோம். எனவே அரசு மானியத்துடன் கூடிய கடனுதவிகளை வழங்க முன்வர வேண்டும். தடைக்காலம் விசைப்படகுகளுக்கு மட்டுேம உள்ளது. இதனை அரசு மறு பரிசீலனை செய்து தடைக்காலத்தில் கடலுக்கு செல்லும் நாட்டு வல்லங்கள், பைபர் படகுகளுக்கும் தடை விதிக்க வேண்டும். மேலும் விசைப்படகு மீனவர்களுக்கு தடைக்கால நிவாரண உதவி தொகையை உயர்த்த வேண்டும் என்றார்.

மானியத்துடன் கடனுதவி

விசைப்படகு உரிமையாளர் காளிக்கனி:- விசைப்படகுகளுக்கு தடைக்காலம் அறிவிக்கப்பட்ட நிலையில், நாட்டுப் படகு மீனவர்கள் விதவிதமான வலைகளை பயன்படுத்தி அதிக திறன் கொண்ட மோட்டார் என்ஜின்கள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தடைக்காலத்தில் இறால், கணவாய் போன்றவற்றை அதிக அளவில் பிடித்து விடுகின்றனர். இதனால் விசைப்படகுகள் தடைக்காலம் முடிந்து கடலுக்கு செல்லும்போது பெரிய அளவில் மீன்கள் கிடைப்பதில்லை.

இதனால் விசைப்படகு மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளுக்கு தடை விதிப்பது போல் நாட்டு படகுகளுக்கும் அரசு தடை விதிக்க வேண்டும். மீன்பிடி தடைக்காலத்தில் படகுகளை சீரமைக்க அரசு ஒரு விசைப்படகுக்கு ரூ.5 லட்சம் மானியத்துடன் கடன் உதவி வழங்க வேண்டும் என்றார்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button