இ-சேவை மையங்கள் 2 நாட்கள் இயங்காது-அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவிப்பு

இ-சேவை மையங்கள் 2 நாட்கள் இயங்காது-அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து அரசு இ-சேவை மற்றும் ஆதார் சேர்க்கை மையங்களில் மென்பொருள் பராமரிப்பு மற்றும் தணிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக, இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (வியாழக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு மேற்கண்ட மையங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மென்பொருள் பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு, ஜனவரி 2ஆம் தேதி முதல் அனைத்து அரசு இ-சேவை மற்றும் ஆதார் மையங்களும் வழக்கம்போல் செயல்படும் என்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1





