கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளம் விரிவாக்க பணிகள் தீவிரம்.

கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளம் விரிவாக்க பணிகள் தீவிரம்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் கடற்கரை துறைமுக பகுதியில் மீன்பிடி இறங்கு தளத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து மீன்பிடி இறங்கு தளத்தை விரிவுப்படுத்த தமிழக அரசு சார்பில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் இரு துறைமுகங்களுக்கு தலா ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டன.
இதனையடுத்து முதல் கட்டமாக கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்தில் விரிவாக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தற்போது உள்ள மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து கூடுதலாக 200 மீட்டர் தூரம் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.
தற்போது குறைந்த படகுகளே நிறுத்தப்பட்டு வருகின்றன. இந்த தளம் விரிவாக்க பணிகள் மூலம் கூடுதல் படகுகள் நிறுத்திவைக்க முடியும் என்று மீனவர்கள் கூறினர்.





