மணமேல்குடி அருகே மதுபோதையில் தகராறு: மீனவர் தலை துண்டித்து படுகொலை; தந்தை-மகன் கைது.

மணமேல்குடி, பிப்.28-

மணமேல்குடி அருகே மதுபோதையில் தகராறு: மீனவர் தலை துண்டித்து படுகொலை; தந்தை-மகன் கைது.

தலையில்லாமல் கிடந்த உடல்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே பொன்னகரம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் கிருஷ்ணன். இவரது மகன் ஆதிநாராயணன் (வயது 34). மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கனிமொழி.

நேற்று முன்தினம் மாலை மணமேல்குடிக்கு சென்று வருவதாக கனிமொழியிடம் கூறிவிட்டு வெளியே சென்ற ஆதிநாராயணன் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று அதிகாலை பத்தக்காடு குடியிருப்பு பகுதியில் தலை இல்லாமல் உடல் மட்டும் கிடப்பதாக மணமேல்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் காணாமல் போன ஆதிநாராயணன் உடல் தான் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களது உறவினர்களை வரவழைத்தும் போலீசார் உறுதி செய்தனர்.

தந்தை-மகன் கைது

இதையடுத்து கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் மணமேல்குடி போலீசார் ஆதிநாராயணனை கொலை செய்தது யாா்? அவரது தலையை எங்கு வீசினார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பத்தக்காடு பகுதியில் வாடகை வீட்டில் தச்சு தொழில் செய்து வந்த ஆனந்தன் (64), அவரது மகன் நாடிமுத்து (34) ஆகிய 2 பேரும் சேர்ந்து ஆதிநாராயணனை கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கொலையாளிகளின் செல்போன் நம்பரை வைத்து அவர்களை தேடி வந்தனர். மேலும் அவர்கள் பட்டுக்கோட்டையில் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று ஆனந்தன், நாடிமுத்து ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது:-

வெட்டிக்கொலை

ஆதிநாராயணன், நாடிமுத்து ஆகிய இருவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் மாலை இவர்கள் இருவரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் கொலை செய்து விடுவோம் என்று கூறியவாறு வீட்டிற்கு சென்று விட்டனர்.

இதற்கிடைேய இரவு நாடிமுத்து வீட்டிற்கு ஆதிநாராயணன் சென்று நாடிமுத்துவின் தந்தையிடம் தகராறு குறித்து கூறியுள்ளார். அங்கு மதுபோதையில் இருந்த நாடிமுத்துவும், ஆனந்தனும் இதனால் ஆத்திரமடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து ஆதிநாராயணன் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை வீட்டின் அருகேயும், தலையை பிளாஸ்டிக் பையில் கட்டி குலச்சிறையார் நகரில் உள்ள வடிகால் வாய்க்காலிலும் போட்டுள்ளனர்.

அரிவாளை பத்தகாடு பகுதியில் குளத்தில் வீசி விட்டு பட்டுக்கோட்டைக்கு தப்பி சென்று விட்டனர். போலீசார் விசாரணையில் மாட்டிக்கொண்டோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சோகம்

இதையடுத்து போலீசார் ஆதிநாராயணன் உடல் மற்றும் தலையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மீனவர் தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button