ஆலங்குடியில் சேலை, தபால் கவரில் மறைத்து வைத்திருந்த ரூ.25 ஆயிரம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை.

ஆலங்குடி, மார்ச்.24-

ஆலங்குடியில் சேலை, தபால் கவரில் மறைத்து வைத்திருந்த ரூ.25 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் கார்த்திக் ராஜா தலைமையிலான பறக்கும் படையினர் புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது தச்சங்குறிச்சியை சேர்ந்த பிராங்கிளில் (வயது 24) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.57 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கந்தர்வகோட்டை தாசில்தார் விஜயலட்சுமி, துணை தாசில்தார் பால்பாண்டியிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

ரூ.25 ஆயிரம் பறிமுதல்

ஆலங்குடி-சேதுபாவசத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் காமராஜ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சேலைகளில் மறைத்து வைத்திருந்த ரூ.16 ஆயிரத்தையும், தபால் கவரில் வைத்திருந்த ரூ.9 ஆயிரத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதன்பின்னர் கார் மற்றும் ரூ.25 ஆயிரத்தை மாவட்ட தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் செல்வியிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button