கடலில் மூழ்கி கோட்டைப்பட்டினம் மீனவர் பலி.

கோட்டைப்பட்டினம், செப்.5-

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று சுமார் 160 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இதில் ஜான்சன் (வயது 43) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் இவரும் மற்றும் குவிட்டோ (45), முருகானந்தம் (55), சுப்பிரமணி (47) ஆகிய 4 பேரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் 7 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது படகில் இருந்து முருகானந்தம் கடலில் தவறி விழுந்து மூழ்கினார். அவரை சக மீனவர்கள் போராடி மீட்டு விசைப்படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

தகவல் அறிந்ததும் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர், ஆம்புலன்ஸ் வேனை தயாராக வைத்திருந்தனர்.

இந்த நிலையில் கரையில் முருகானந்தத்தை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கடலில் மூழ்கி மீனவர் பலியான சம்பவம் சக மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button