கோபாலப்பட்டினம் “GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு” சார்பாக மூன்று நபர்களுக்கு மருத்துவ உதவி.

கோபாலப்பட்டினம்,ஆகஸ்ட்.04-

கோபாலப்பட்டினம் “GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு” சார்பாக மூன்று நபர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் “GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு”  சார்பாக பொருளாதாரம் சார்ந்த பல்வேறு நல உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முகமது சமி என்ற சிறுவனுக்கு பொருளாதார உதவி செய்வதற்காக “GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு” சார்பாக நிதி திரட்டப்பட்டது.

ஆனால் அச்சிறுவனுக்கு போதிய அளவிற்கு பொருளாதாரம் கிடைத்துவிட்டதால் வசூல் செய்த தொகையை மருத்துவ உதவி தேவைப்படும் பிற நபர்களுக்கு கொடுக்கலாம் என அனைவரின் ஒப்புதலோடு முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மூன்று நபர்களுக்கு மருத்துவத்திற்காக நிதி உதவி “GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு” சார்பாக வழங்கப்பட்டது.

பயனாளிகளின் விவரம்:

1.கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த சேகு அம்மாள்(33)  அவர்களுக்கு மருத்துவத்திற்காக ரூ.17,500 நிதி வழங்கப்பட்டது.

2.தொன்டியை சேர்ந்த சுல்தான் பீவி(44) அவர்களுக்கு  மருத்துவத்திற்காக ரூ 17,500 நிதி வழங்கப்பட்டது.

3.திருநெல்வேலியை சேர்ந்த கவின் ராஜ்(6)  என்ற சிறுவனுக்கு (சென்னை மருத்துவமனையில்) கிட்னி மாற்றுசிகிச்சைக்காக ரூ12,000 வழங்கப்பட்டது.

மருத்துவ தேவைக்காக பொருளாதாரம், நேரம், உடல் உழைப்பை  வழங்கிய அனைத்து சொந்தங்களின் நன்மையை அல்லாஹ் எற்றுகொள்வானாக!.

Gpm சொந்தங்கள் வாட்ஸ்அப் குழுவினருக்கும், தங்களுடைய பொருளாதாரம், நேரம், உடலை உழைப்பை வழங்கிய அத்துனை பேருக்கும் GPM தலைமுறை மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button