மணமேல்குடி ஒன்றியத்தில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு “எண்ணும் எழுத்தும்” பயிற்சி தொடக்கம்.

மணமேல்குடி,ஜூன்.26-

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மற்றும் தொடக்க நிலை மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சியினை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் அமுதா தொடங்கி வைத்தார்.

மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் முன்னிலை வகித்தார்.

நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பயிற்சி பாடவாரியாக தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் பயிற்சி வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு அடிப்படை திறன்களை வளர்ப்பதற்காக ஒவ்வொரு பாடத்திற்கும் கற்றல் கற்பித்தல் உபகரணங்களை கொண்டு மாணவர்கள் எளிதில் கற்பதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும் பயிற்சியில் பாடவாரியாக வழங்கப்பட்டது.

இப்பயிற்சியில் கருத்தாளர்கள் தலைமை ஆசிரியர்கள் கோவிந்தராஜ் தேவராஜ் கோவிந்தராஜன் காந்தி, ஷாலினி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button