மணமேல்குடி ஒன்றியத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் முதல் பருவம் பயிற்சி.

மணமேல்குடி,ஜூன்.24-

மணமேல்குடி   ஒன்றியத்தில்  1 முதல் 3 ம் வகுப்பு வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் முதல் பருவம் பயிற்சி தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மற்றும் தொடக்க நிலை மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படிஇப் பயிற்சியினை மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளயில் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் செழியன் தொடங்கி வைத்தார்.

மணமேல்குடி  வட்டார கல்வி அலுவலர் அமுதா மற்றும்  வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பயிற்சி பாடவாரியாக தமிழ் மற்றும் ஆங்கிலம்  ஆகிய பாடங்களில் பயிற்சி வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு அடிப்படை திறன்களை வளர்ப்பதற்காக ஒவ்வொரு பாடத்திற்கும் கற்றல் கற்பித்தல் உபகரணங்களை கொண்டு மாணவர்கள் எளிதில் கற்பதற்கும, ஊக்கப்படுத்துவதற்கும் பயிற்சியில் பாடவாரியாக வழங்கப்பட்டது.

இப்பயிற்சியில்  கருத்தாளர்கள்  தாமஸ் கிங், சரஸ்வதி, பெல்சியா, ரஹ்மத் பேகம்  ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button