கோபாலப்பட்டினம் பழைய காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி

கோபாலப்பட்டினம் , மார்ச்.6-
கோபாலப்பட்டினம் பழைய காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி
பிஸ்மில்லாஹ்
இஃப்தார் அழைப்பிதழ்
அன்புடையீர்;
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), இன்ஷா அல்லாஹ் வரும் 08-03-2025 பிறை 07 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கோபாலப்பட்டினம் பழைய காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள தெரு மக்களின் சார்பாக சிறப்பு பயானுடன் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே தாங்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் தவறாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.
குறிப்பு:
பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.
அனைவரும் வீட்டிலே உளு செய்துவிட்டு வாருங்கள் இப்தார் நிகழ்ச்சியினை தொடர்ந்து மக்ரிபு தொழுகையும் நடைபெறும்.
இடம்:
கோபாலப்பட்டினம் பழைய காலனியில் உள்ள வருசை ஹாஜியார் தெருவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





