வீடுகளில் நூலகங்களை பராமரிப்பவர்களுக்கு விருது; விண்ணப்பிக்க 15-ந் தேதி கடைசி நாள்.

புதுக்கோட்டை, அக்.8-

வீடுகளில் நூலகங்களை பராமரிப்பவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 15-ந் தேதி கடைசி நாளாகும்.

வீடுகளில் நூலகங்கள்

தமிழ்நாடு அரசு வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு மாவட்டந்தோறும் புத்தக திருவிழாக்களை நடத்தி வருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்கள் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து ஊக்குவிக்க சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகங்களில் மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நூலகம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படவுள்ளது.

15-ந் தேதி கடைசி நாள்

புத்தக ஆர்வலர்கள் தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் தங்கள் வீட்டு நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை, எந்தெந்த வகையான நூல்கள், அரிய வகை நூல்கள் இருப்பின் அதன் விவரம், எந்த ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வருகிறது ஆகிய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை “மாவட்ட நூலக அலுவலர், மாவட்ட நூலக ஆணைக்குழு, டி.எஸ்.எண்.104, மேல 4-ம் வீதி, புதுக்கோட்டை-622 001” என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 15-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.

அல்லது dlopdkt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button