மாவட்டத்தில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வினியோகிக்க ஏற்பாடு; உதிரிபாகங்கள் வந்தன.

புதுக்கோட்டை, ஜூலை.15-

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா சைக்கிள் வினியோகிக்க உதிரி பாகங்கள் வந்திறங்கியுள்ளன.

விலையில்லா சைக்கிள்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், உபகரணங்கள், புத்தக பைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அந்த வகையில் பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், புத்தக பைகள் உள்ளிட்டவை பள்ளி திறந்த நாளிலே மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டன. அடுத்ததாக விலையில்லா சைக்கிள் வினியோகிக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

உதிரிபாகங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை விவரம் பள்ளி வாரியாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப விலையில்லா சைக்கிள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விலையில்லா சைக்கிள்களுக்கான உதிரிபாகங்கள் பள்ளிகளுக்கு வந்திறங்க தொடங்கியுள்ளன. சைக்கிளுக்கான டயர்கள், வீல்கள் உள்ளிட்ட உதிரிபாகங்கள் பள்ளிகளுக்கு வருகிறது. அதனை பொருத்தி முழுமையாக சைக்கிளாக உருவாக்கி மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது. புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள்களுக்கான உதிரிபாகங்கள் வந்திறங்கின. அதனை பள்ளி வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. விரைவில் இதனை பொருத்தும் பணி நடைபெற உள்ளது. அதன்பின் விலையில்லா சைக்கிள் மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button