நாட்டானி புரசக்குடி ஊராட்சியின் காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்ட அழைப்பிதழ்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானி  புரசக்குடி ஊராட்சியின் காந்தி ஜெயந்தி கிராம சபைக் கூட்டம் 02.10.2024 புதன்கிழமை காலை 11.00 மணியளவில் ஆர்.புதுப்பட்டினம் முருகன் கோயில் அருகில் நடைபெறுகிறது.

ஊராட்சிமன்ற தலைவர் திருமதி. ரா.சீதாலெட்சுமி MSc,.BEd., தலைமையிலும், திருமதி பிரியா குப்புராஜா அவர்கள் ஒன்றியக்குழுத் துணைத்தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் திருமதி. திரு.பெ.ரமேஷ் மற்றும் கமர்நிஷா அபுதாஹீர் தலைமையில் நடைபெறவுள்ளது.

கூட்டத்தில் ஒன்றிய அலுவலர்களும், ஊராட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த கூட்டத்தில் பொதுமக்களும், சுய உதவிக் குழுவினரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கூட்டப்பொருள்

  • ஊரக பகுதிகளில் தூய்மையான குடிநீர் வழங்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக.
  • குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல் தொடர்பாக.
  • கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்.
  • ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து விவாதித்தல்.
  • மாற்று திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம்.
  • ஜல் ஜீவன் இயக்கம்.
  • இதர பொருள்கள்.

மேலும் நடைபெறவுள்ள இந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button