‘ஆபரேஷன் அகழி’ 2-வது பெயர் பட்டியலில் 16 பேர் வீடுகளில் சோதனை, சட்டவிரோதமாக பெறப்பட்ட 290 சொத்து ஆவணங்கள் பறிமுதல்.

புதுக்கோட்டை, அக்.8-

திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் “ஆபரேஷன் அகழி” 2-வது பெயர் பட்டியலில் 16 பேர் வீடுகளில் சோதனை நடைபெற்றது. இதில் சட்டவிரோதமாக பெறப்பட்ட 290 சொத்து ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆபரேஷன் அகழி

திருச்சி மாநகர், புறநகர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே ஆகியோரின் உத்தரவின் பேரில் “ஆபரேஷன் அகழி” என்ற பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்ற செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகப்படும் நபர்களின் முதல் பெயர் பட்டியல் (லிஸ்ட்) தயார் செய்து, கடந்த மாதம் 19-ந்தேதி அவர்களது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, பல்வேறு ஆவணங்கள், கணக்கில் வராத பணம், நகைகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சட்டவிரோதமாக

இதனை தொடர்ந்து நேற்று “ஆபரேஷன் அகழி” 2-வது பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டது,

இதில் பால்ராஜ், விமல் என்கிற செல்வ குமார், ஸ்டீபன் ராஜ், ராமு, நாகேந்திரன் என்கிற பாம்புகுட்டி நாகேந்திரன், நவீன் குமார், ராஜா, பெரியசாமி என்கிற கருவாடு பெரியசாமி, ரமேஷ், சன்னாசி என்கிற செந்தில், ஆனந்த், காத்தான் என்கிற காத்தப்பிள்ளை, கங்கா என்கிற திலீப் குமார், விசு என்கிற விசுவநாதன், முருகானந்தம் மற்றும் மணிமாறன் ஆகியோரது விவரங்களை சேகரித்து அதிரடியாக அவர்களது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் 16 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், 16 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 48 போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை முடிவில் அந்த 16 பேரிடம் இருந்து தொடர்பில்லாத 290 சொத்து ஆவணங்களும், 45 வங்கி கணக்கு புத்தகங்களும், 60 புரோநோட்டுகளும், 22 நிரப்பப்படாத காசோலைகளும், 5 செல்போன்களும், 13 சிம்கார்டுகளும், அரிவாள், துப்பாக்கி உள்ளிட்ட பிற ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவைகள் அனைத்தும் சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்து மூலமாகவும். கந்து வட்டி தொழில் மூலமாகவும் மிரட்டி பெறப்பட்டவை என விசாரணையில் தெரியவந்தது.

3, 4-வது பெயர் பட்டியல் தயார்

மேலும் பாதிக்கப்பட்டவர்களின் கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 மற்றும் 4-வது பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு சோதனைக்கான ஆயத்த பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் ஆபரேஷன் அகழியின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்துவரும் நபர்களை தனிப்படை அமைத்து விரைந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில், நில உரிமையாளர்களை யாரேனும் கட்டப்பஞ்சாயத்து மற்றும் நில அபகரிப்பு செய்யும் நபர்களோ, சரித்திர பதிவேடு குற்றவாளிகளோ நேரடியாகவோ அல்லது தொலைபேசியின் மூலமாக மிரட்டினால் அவற்றை ஆடியோ, வீடியோ, கண்காணிப்பு கேமரா ஆதாரங்களுடன் புகார் அளிக்குமாறும், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரின் உதவி எண் 97874 64651 என்ற எண்ணிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button