அமரடக்கி புன்னகை அறக்கட்ளை நடத்தும் இலவச மரக்கன்று வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

அறந்தாங்கி ஆகஸ்ட் 7

அமரடக்கி புன்னகை அறக்கட்ளை சார்பாக இலவச மரக்கன்று வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அமரடக்கி புன்னகை அறக்கட்ளை  நடத்தும் தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் புன்னகை அறக்கட்டளயின் உறுப்பினரும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த மனிதநேயர் ரவிகங்காசலம் மகன் ரிஷிரவி பிறந்த நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஒன்றியம் இரும்பாநாடு ஊராட்சியில் இரும்பாநாடு ஊராட்சி மன்ற தலைவர் முத்து தலைமையில் புன்னகை அறக்கட்டளை நிறுவனர் கலைபிரபு முன்னிலையில் குருதிக்கொடை ஒருங்கிணைப்பாளர் இராமர், மாவட்டத் தலைவர் சிரஞ்சீவி, தமிழ்மரம் திட்டத் தலைவர் பெரியசாமி, செயற்குழு உறுப்பினர் ராஜ்க்குமார், சமூகஆர்வலர்  இரும்பாநாடு வேலாயுதம், ஊராட்சி செயலாளர் குமார், பணிதள பொறுப்பளர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வழங்கினர்.

இரும்பாநாடு ஊராட்சி பொதுமக்களுக்கு 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு பழவகை மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button